10/12/2018

இயற்கை விவசாயம்



பசுமைப் புரட்சியென்றும்
பயிரில் புதுமையென்றும்
மகசூல் பெருகுதென்று
மகிழ்ச்சி கொள்ளவச்சு
மரபணு விதைக்குள்ளே
மரணத்தை விதைச்சபோதும்
பழைய நெல் வாங்கிவச்சு
புது நெல் தரும்போதும்
என்ன காரணம்னு
எவருமே கேக்கலையே?!!

வெள்ளைக் கோழி தந்த
வெளிநாட்டுக் காரனால
சைவ உணவுலயும்
சவக் கணக்கு கூடயில
பூச்சிகூட திங்காத
புழுத்த காய்கறிய
சந்தையில விக்கவைச்சு
சனத்தை கொல்லையில
படிச்ச பயபுள்ளை
பேசாமல் இருந்ததால
பாமர மக்களையும்
படுகுழியில் வீழ்த்திடுச்சே...

நிறைய பெத்து போட்டு
நிறைவோடு வாழ்ந்த மண்ணில்
குழந்தை இல்லையென்ற
குறைபோக வேணுமுன்னா
மிச்சமுள்ள நம்பிக்கையில்
மீட்டிடுவோம் விவசாயத்தை...
கருணையுள்ள இதயத்தோடு
காத்திடுவோம் இயற்கையினை...

✍️செ. இராசா

No comments: