05/12/2018

ஆழக்குழி தோண்டி..............



"ஆழக்குழி தோண்டி
அதிலே ஒரு முட்டையிட்டு
அண்ணார்ந்து பார்த்தால்
தொண்ணூறு முட்டை"

இல்லை.....இல்லை

"சின்னக் குழி தோண்டி
சின்னதொரு முட்டையிட்டு
மண்மேலே பார்த்தால்
எண்ணூறு முட்டை"

விடுகதைகள் இரண்டுக்கும்
விடை மட்டும் ஒன்றே...
விடை அறிந்த உங்களிடம்
வினா ஒன்று கேட்கின்றேன்?

மண் நீரைத் தானுறிஞ்சி
விண்ணோக்கி வளருகின்ற
தென்னையின் இளநீரில்
எத்தனையோ பலனிருக்க
அத்தனையும் விட்டுவிட்டு,

மண்ணை விட்டு எழும்பாத
மண்ணிலே உறங்குகின்ற
தென்னை நகல் இளநீரில்
என்ன பலன் உள்ளதென்று
ஏன் இதை வைக்கின்றீர்?

மரபணு மாற்றுவதில்
தெரியாத நோயோடு
மரணமும் வருமென்று
நம்மாழ்வார் சொன்னதெல்லாம்
நமக்காகத் தானன்றோ?!!

செ.இராசா

(ஆம் மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் இயற்கைக்கு விரோதமானது. அண்ணாந்து பார்க்கும் அளவு உயர்ந்து அதில் நீரோட்டம் நடந்து வளரும் தென்னையே மிக நல்லது..

எல்லாம் வியாபாரநோக்கில் சந்தைப்படுத்தி நாட்டை அழிக்கின்றார்கள் உறவுகளே.....தயவுசெய்து தவிருங்கள்)

No comments: