19/12/2018

மோனை & எதுகை



அன்பு நண்பர்களே,

தமிழில் இலக்கணம் பற்றி நிறையபேர் சொல்லி இருந்தாலும் கீ. வா. ஜகந்நாதன் ஐயா அவர்களின் "கவி பாடலாம்" என்ற புத்தகத்தில் மிக மிக எளிய முறையில் புரியும்படி விளக்கியுள்ளார். அதில் இருந்து எடுத்தவற்றை மேலும் சில குறிப்புகளோடு தருகின்றேன்.

மோனை:
************
* முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும். (உ.ம்: க-க)

* அ-ஆ-ஐ-ஔ----என்ற நான்கும் வரலாம். (இது இந்த வரிசையில் வரும் உயிர்மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும். உ.ம்: க-கா-கை-கௌ)

* இ-ஈ-எ-ஏ-என்ற நான்கும் வரலாம். (இது இந்த வரிசையில் வரும் உயிர்மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும். உ.ம்: கி-கீ-கெ-கே)

* உ-ஊ-ஒ-ஓ-என்ற நான்கும் வரலாம் (இது இந்த வரிசையில் வரும் உயிர்மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும். உ.ம்: கு-கூ-கொ-கோ)

* இது போக சிறப்பு விதியாக ச-வுக்குத் த-வும், ஞ-வுக்கு ந-வும், ம- வுக்கு வ-வும் வரலாம். (ச-சா-சை-செள-த-தா-தை-தௌ---எட்டு எழுத்துக்களை மோனையாக்கலாம்...இப்படியே மற்ற இரண்டு இணைகளுக்கும் வரும்)

எதுகை
**********
* இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.

* கடம்-படம்-தடம்-----என்று வருவது ஒத்த எதுகை.

* கலம்-கலி----என்று வருவது வருக்க எதுகை. குறில் என்றால் குறில்/ நெடில் என்றால் நெடில் (ல-லி-லு-லெ-லொ மற்றும் லை (லய்-என்று வருவதால், லை- விதிவிலக்கு),

* கற்ற-சட்ட----என்று வருவது இன எதுகை. (க ச ட த ப ற---அல்லது --- ஞ-ங-ண-ந-ம-ன----அல்லது--ய-ர-ல-வ-ழ-ள)

* சிறப்பு விதியாக வருவது ஆசிடை எதுகை-- (ய்-ர்-ல்-ழ்---என்ற எழுத்துக்கள் வந்ததற்குப் பின் வரும் மூன்றாம் எழுத்து கணக்கில் கொள்ளப்படுவது....உ. ம்: தீமை- வாய்மை)

* மேலும் ஒரு முக்கிய விதி: (கம்பு-பாம்பு என்றால் தவறு , காம்பு-பாம்பு என்றால் சரி....அதாவது முதல் எழுத்து குறிலா நெடிலா என்பதும் கவனிக்க வேண்டும்)

-----தொடரும்--

--செ. இராசா

No comments: