14/12/2018

உன் பார்வையில்


பெண் பார்க்கையில்- உந்தன்
கண் பார்க்கையில்- நான்
மின்னலின் கீற்றொன்று கண்டேன்- அடி
அன்றுதான் நானென்னைக் கொன்றேன்!

நீ பார்க்கையில்- பின்பு
நான் பார்க்கையில்- நான்
மனத்திலே மலரொன்று கண்டேன்- அடி
அன்றுதான் நான்மாற்றம் கொண்டேன்

ஊர் பார்வைக்கும்- உந்தன்
ஓர் பார்வைக்கும்- நான்
என்னுள்ளே பலமாற்றம் கண்டேன்- அடி
அன்றுதான் நான்காதல் கொண்டேன்!

✍️செ. இராசா

PC உதவி: திரு. முத்து சாமி இயக்குநர்

No comments: