04/12/2018

கவரிமான் போல்


வஞ்சினப் பகையோடு
நஞ்சினைத் தந்ததும்
கெஞ்சிடும் கூட்டமா நாங்கள்- நீ
குண்டுகள் போட்டாலும்
கொன்றிட வந்தாலும்
அஞ்சிடா கூட்டமே நாங்கள்!

உயிரோடு உயிராக
உறவாடிக் கெடுக்கின்ற
உயர்திணை மிருகமா நாங்கள்?- தலை
மயிரொன்று விழுந்தாலே
உயிரினைத் துறக்கின்ற
கவரிமான் இனமடா நாங்கள்!

#மானம்_பெரிது
#குறளின்_குரலில்

No comments: