05/12/2018

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்--கதாதாசன்


தமிழ்ச்சோலைத் தடாகத்தில்
தமிழ்த்தாகம் தீர்க்கின்ற
எத்தனையோ உறவுகளில்
முத்தைப்போல் ஒளிவீசும்
கண்ணதாசன் அடியேனே...
கதாதாசன் ஆனோனே...

நான் எனும் மண்குடத்தை-அன்று
நீ வந்து கண்டபோது
நானொன்று புரிந்து கொண்டேன்...
அன்பிற்கு ஈடு இணை
அன்பென்றே அறிந்து கொண்டேன்

வெளியூரில் இருந்த நானும்
வேரூரில் இருந்த நீயும்
கரூரில் கண்டபோது
வேறொன்றும் தெரிந்து கொண்டேன்
அன்பின் எல்லை விரியுமெனில்
அகிலமே சொந்தமென்று...

அகநூலில் அன்றைக்கே
அழுத்தமாய் ஏற்றி விட்டேன்.....
முகநூலில் நான் கண்ட
முத்து எந்தன் சொத்து என்று....

வாழ்க வளமுடன் தம்பி

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

No comments: