21/12/2018

#உயிரிருக்கும் வரையே




#உயிரிருக்கும் வரையே
..............உடலிருக்கும்- நல்ல
உடலிருக்கும் வரையே
..............உழைப்பிருக்கும்- நல்ல
உழைப்பிருக்கும் வரையே
..............உயர்விருக்கும்- நல்ல
உயர்விருக்கும் வரையே
..............ஊர்மதிக்கும்- இந்த
ஊர்மதிக்கும் வரையே
...............உறவிருக்கும்- நல்ல
உறவிருக்கும் வரையே
................உவப்பிருக்கும்- இந்த
உவப்பிருக்கும் வரையே
...............உலகிரு(னி)க்கும்- இந்த
உலகிருக்கும் வரையே
...............#உயிரிருக்கும்

(மீண்டும்)

✍️செ. இராசா

இது என் அன்புக்கவி அப்பா கவிஞர் அ முத்துசாமி தாரமங்கலம் அவர்களின் கவிதையில் இருந்த பிறந்த கவிதை.

ஒரு கவிதை மற்றொரு கவிதையைப் பிரசவித்தால் அந்தக் கவிதை மிகச்சிறந்த கவிதை என்பது என் திண்ணம்.

அந்த மிகச்சிறந்தக் கவிதையின் இணைப்பு கீழே உள்ளது

https://www.facebook.com/100005429500121/posts/962267497297558/

No comments: