18/12/2018

பெரிதாய் நினை


கருத்திலே வள்ளுவன்போல்- ஞானச்
செருக்கிலே பாரதிபோல்;

கற்பனையில் கம்பனைப்போல்- நல்ல
சொற்புனைவில் கவியரசர்போல்;

அருட்கவியில் வள்ளலார்போல்-பெரும்
பொருட்கவியில் வாலியைப்போல்;

கைக்கூவில் கவிக்கோபோல்- புதுக்
குக்கூவில் மீராவைப்போல்;

தத்துவத்தில் கலைஞரைப்போல்-நல்ல
சொற்பதத்தில் வைரமுத்துபோல்;

இசைக்கவியில் ரமணரைப்போல்-நம்ம
இதயக்கவி விக்டரைப்போல்;

தமிழ்க்கவியாய்க் கோலோச்ச- நானும்
தமிழ்த்தாயை வேண்டுகிறேன்!!!

✍️செ. இராசா

திரு. விக்டர்தாஸ் கவிதைகள் அண்ணாவை வணங்கி 🙏🙏🙏 சமர்ப்பிக்கிறேன்

(இடம்: கம்பர் கோவில், நாட்டரசன்கோட்டை)

#பெரிதாய்_நினை
#பெரிதிலும்_பெரிது_கேள்

No comments: