08/12/2018

ஆத்தோரத் தோப்புக்குள்ள


தன்னானே தானே நன்னே
தன்னானே நானே நன்னே
தன்னானே தானே நன்னே
தானா...னே நானே நன்னே

ஆத்தோரத் தோப்புக்குள்ள
காத்திருக்கும் பூங்குயிலே....
அத்தானின் நெஞ்சுக்குள்ள
சத்தியமா குத்தமில்ல...

என்னோட நெஞ்சுக்குள்ள
என்னைக்கோ வந்த மச்சான்
உன்னை நான் குத்தமுன்னு
என்னைக்குமே சொன்னதில்லை...

ஓக்கூரூ சந்தையில
கத்திரிக்கா வாங்கையில
ஆத்தாடி உன்னால நான்
காத்தாடிப் போனேன் புள்ள...

மின்சாரக் கண்ண வைச்சு
என்னோடு பேசும் மச்சான்
கண்ணாலம் கட்டிடுங்க
எந்நாளும் கேட்டிடலாம்...

ஆத்தோரம் கொஞ்சுகின்ற
அத்தை பெத்த சின்ன புள்ள
ஆவணி வந்த பின்னே
தாவணியே தேவை இல்லை

ஐயோ...ம்கூம்...போங்க மச்சான்
ஆசை வச்ச மீசை மச்சான்
சீக்கிரம் வாங்க மச்சான்
சின்ன புள்ள பாவம் மச்சான்....

இங்க பார்ரா...சின்ன புள்ளையாமுள்ள...
போங்க...மச்சான்

✍️செ. இராசா

காணொளிக்கு இங்கே....

https://www.facebook.com/100000445910230/posts/2257314940960014/

No comments: