17/12/2018

மனமெனும் மந்திரச்சாவி



என்னதான் மனிதன் முயன்றாலும்
எண்ணம்தான் மனிதனை முன்னேற்றும்!
என்னதான் அறிவியல் வளர்ந்தாலும்
எண்ணம்தான் அறிவை வளமாக்கும்!

மனிதனில் மனத்தைக் கழித்துவிட்டால்
மிருகமாய் உலகம் வகைப்படுத்தும்!
மனதினில் மாசினைக் கழித்துவிட்டால்
மனிதனை தெய்வமாய் மிகைப்படுத்தும்!

விரிந்து செல்கிற மனதினிலே
பிரபஞ்சம் அருகில் புலனாகும்!
குருகிச் செல்கிற மனதினிலே
குற்றமே கண்ணில் புலனாகும்!

மனமெனும் மந்திரச் சாவியிலே
மாயையின் பூட்டும் திறந்துவிடும்!
மனமெனும் அற்புதக் கருவியிலே
மறைந்துள்ள பொருளும் தெரிந்துவிடும்!

#வெற்றி_பெறாத_கவிதை
✍️செ. இராசா

No comments: