21/10/2018

சட்டத்தின் பார்வைக்கு



சட்டத்தின் பார்வைக்கு
சாக்கடைகள் தெரியலையே
உச்சத்தில் இருப்போர்க்கு
எச்சைகள் தெரியலையே

நீதியின் வலைக்குள்ளே
நித்திகள் மாட்டலையே..
ரஞ்சிதம் செய்தார்மேல்
ரௌத்திரம் காட்டலையே..

காணொளி சிக்கினாலும்
காட்சிகள் மாறலையே....
சாமிகள் மாட்டினாலும்
மாமிகள் போகலையே....

பெண்ணியம் பேசும்முன்
உண்மையை உணருங்கள்...
இருமுடி தூக்கும்முன்
இவர்களைத் துரத்துங்கள்...

(குறிப்பு:
********
இரண்டு பேர் மலையேற
இருநூறு காவலர்கள்
இருமுடியைத் திறந்தாலோ
இருப்பதோ கொய்யாப்பழம்

போங்க... போங்க....)

✍️செ. இராசா

No comments: