17/10/2018

தோல்வி துன்பத்திற்கே


புலனத்தில் வந்த ஒலிநாடாவில்
சலனத்தோடு ஒரு குரல்...

சொன்னது அனைத்தும்
சொல்லவண்ணாத் துயரங்கள்...
சொல்லும் குரலுக்கு
சொந்தமானத் துயரங்கள்....

துக்கமும் துயரமும்
தொண்டையை அடைத்தது
கண்களை நனைத்தது
மனங்களைத் தைத்தது

வேகமாய்க் கைபேசியில் தொடர்புகொள்ள
அதே குரல் மறுமுனையில் ...

ஆனால்....இம்முறை
கம்பீரமாய்க் கதைத்தது....
எனக்கு ஆறுதல் கூறியது......
நகைப்போடு...ஆறுதல் கூறியது..

உண்மையில் நான்
துன்பம் தோற்றது கண்டேன்

ஆம்...

துன்பம் தொடருமாயின்
தோல்வி துன்பத்திற்கே..........

No comments: