20/10/2018

அனுபவம் அனுபவமே



உயர்ந்த கோபுரத்தை
உரசிடும் மேகங்கள்..

சுட்டிடும் பாலையைத்
தொட்டிடும் தூரல்கள்...

ஈர சாலைகளில்
ஊர்ந்திடும் ஊர்திகள்...

மழையின் பேரழகில்
சுயமியில் சிரிப்பவர்கள்...

புலனம் வழியாக
பகிர்ந்திடும் உறவுகள்

அனைத்தையும் ரசிக்கின்ற
அனுபவம் அனுபவமே....

No comments: