13/10/2018

எழுத்துப் பிழை





💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

இன்று "எழுத்துப் பிழை" என்ற ஒரு வித்தியாசமான தலைப்பில் நான் எழுதிய கவிதைக்கு பின்னூட்டமாய் வந்த மரியாதைக்குரிய தமிழ்ப் பாமணி அகன் மாமா அவர்களின் கவிதையில் மிகவும் மனம் மகிழ்ந்தேன்.

இப்படி எழுதுவதை வெண்பாக்களில்தான் நான் பார்த்துள்ளேன். எனக்கு வெண்பா தெரியாததால் அவைகளை நான் ரசிப்பதோடு சரி. நான் எழுதிய கவிதைக்கும் முதன்முதலில் வந்த பதில்கவிதையில் உண்மையில் மிகவும் மனம் மகிழ்ந்தேன்.

இரண்டு கவிதைகளும் இதோ உங்கள் பார்வைக்காக...........

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

எழுத்துப் பிழை
**************
இறைவன் எழுதிய அருட்பாவில்; நான்
இடையில் பிழையாய் வந்தேனா-இல்லை
கடவுள் படைத்த கவிப்பாவில்; நான்
காட்சிப் பிழையாய் வந்தேனோ?

எந்தை சிந்திய துளிப்பாவில்; நான்
விந்தைப் பிழையாய் வந்தேனா- இல்லை
எல்லை இல்லா வினைப்பாவில்; நான்
எழுத்துப் பிழையாய் வந்தேனா?

✍️இது அடியேனின் வரிகள்...

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

எழுத்துப் பிழை
**************
இறைவன் ஊட்டிய அருட்பாலில் - நீ
இடையில் பிழையாய் வரவில்லை - அந்தக்
கடவுள் படைத்த கவிப்பாலில் - நீ
காட்சிப் பிழையும் இல்லையடா..

உந்தை சிந்திய துளிப்பாவில் - உன்
உதிரம் மேனி இரண்டிலுமே - தமிழ்
வந்து விழுந்த ததனால்தான் - நீ
சிந்தும் மையும் சிரிக்குதடா….

வாழ்த்துகள் ராசா…

---✍️ இது தமிழ்ப்பாமணி அகன் மாமா வரிகள்

No comments: