14/10/2018

மழைக்கால நிலவே வா வா



மழைக்கால நிலவே வா வா- என்
மனதை வருடிட வா....
வெண்மேக நிலவே வா வா- என்
வேதனை போக்கிட வா....

வெண்மை சுமந்து வளியில் தவழ்ந்து
அன்பைத் தூவிடும் நிலவே....
உன்னைக் கண்டதும்
என்னகம் சொல்லிடும்
உண்மையை யாரறிவாரோ- அந்த
உண்மையை நீ அறிவாயோ...

(மழைக்கால நிலவே....)

புவியை நினைந்து பதியெனச் சுழன்று
கவிதை செய்திடும் நிலவே
என்னை நினைந்து
என்னகம் சுற்றிடும்
பெண்ணினைக் காட்டிடுவாயோ- அந்த
பெண்ணென நீ வருவாயோ?!!

(மழைக்கால நிலவே....)

No comments: