19/10/2018

கடலில் இருந்த மீனொன்று




கடலில் இருந்த மீனொன்று
கடலைக் காணும் ஆசையிலே
கடலைத் தாண்டி வந்ததுவாம்!

கடலைக் காண்கிற ஆர்வத்திலே
கடலின் அழகில் தனைமறந்து
கடலுக்குத் திரும்பிட மறந்ததுவாம்!

கடலின் உள்ளே இருக்கையிலே
கடலை அறியா மடமையெண்ணி
கரையில் உயிரைத் துறந்ததுவாம்!

No comments: