10/10/2018

பொய் சுடுமா??


உண்மை சொல்லா மனிதருக்கே
நெஞ்சம் சுடுமெனச் சொன்னீரே-ஐயா
உண்மை சொல்லும் மனிதருக்கே
உண்மையில் சோதனை கண்டீரோ?!!

பொய்யே சொல்லா அரிச்சந்திரன்
பொல்லா வேதனை அடைந்தானே- ஐயா
மெய்யே சொன்ன அவனுக்கும்
பொல்லா வேதனை சரிதானோ?!

பொய்யே சொல்லா தருமரையும்
மெய்யை மறைக்கச் சொன்னாரே- ஐயா
மெய்யாய் வாழ்ந்த மனிதனையும்
பொய்யுக்கு அழைத்தது சரிதானோ?

இருவரை மனதில் நிலைநிறுத்தி
இந்தியத் தந்தை வாழ்ந்தாரே- ஐயா
நெஞ்சில் பொய்சுடும் என்றீரே;அவர்
நெஞ்சைச் சுட்டது மெய்யன்றோ?!

மெய்யாய் வாழ்ந்த தலைவருக்கே
ஊழ்வினை சுட்டிடும் என்றாலே- தம்பி
பொய்யாய் வாழும் மனிதர்களை
பாழ்வினை சுடாது விட்டிடுமோ?!!

No comments: