20/10/2018

சேத்த காசு எங்க மாமா




தோட்ட வேலை பார்த்து பார்த்து
சேத்த காசு எங்க மாமா?
மந்தச்செய்யில் இடம் வாங்கி
மக்காச்சோளம் போடு மாமா

பார்த்து பார்த்து சேர்த்த காசில்
பாதிதானே கிட்டும் புள்ள
மீதி காசு இல்லாமத்தான்
நாதியத்து நிக்கேன் புள்ள

என்ன மாமா சொல்லுறீக
ஏன் உசுரு இருக்கையிலே...
அப்பன் தந்த சீதனத்தில்
அரைப்பவுனு தேறும் மாமா..

ஆனைபோல மனசு வச்சு
ஆத்தாவாய் வந்த புள்ள
உன் மல்லிக்கைப்பூ மனசைப்போல
இனி எல்லாமே மணக்கும் புள்ள..

-செ. இராசா-

No comments: