06/10/2018

கண்ணீர்


அழுக்கினைத் துடைத்தெறிய
ஆண்டவன் அருளியது
கண்ணீர்!

புண்பட்ட மனங்களின்
ரணங்களை குறைப்பது
கண்ணீர்!

இன்பத்தின் உச்சியிலே
இமைகளை நனைப்பது
கண்ணீர்!

மழலையின் கண்ணீர்- அது
மொழியின் ஆரம்பம்!

மங்கையின் கண்ணீர்- அது
சமூகத்தின் அவமானம்!

ஆண்களின் கண்ணீர்- அது
ஆற்றாமை அடையாளம்!

ஆயினும்;

அன்பின் கண்ணீர்- அது
இன்பத்தைக் கூட்டிவிடும்!

பரவசக் கண்ணீர்- அது
பக்தியைப் பெருக்கிவிடும்!

இடரின் கண்ணீர்- அது
துயரினைக் கழித்துவிடும்!

இரக்கத்தின் கண்ணீர்- அது
கருணையைக் காட்டுவிடும்

உடைந்துவரும் கண்ணீர்- அது
உள்ள(த்)தை பறைசாற்றும்!

பெருகிவரும் கண்ணீர்- அது
பெருந்துயரை வி(வ)ழிமொழியும்!

கண்ணீர் வழியட்டும்!
கண்ணீர் வழியட்டும்!

✍️செ. இராசா

No comments: