13/10/2018

எங்கே எனது கவிதை


மணிக்கொரு கவிதையென
மலர்ந்து வந்த கவிதைகளை
மாலையாய் கட்டி வைத்து
மங்கைக்கு சூட்டிடவே
நாளொன்று பார்த்து வைத்து
நாயகியை நாடுகையில்
புன்னகை பூத்தவாறு
என்னவளும் என்னவென்றாள்

மின்னலின் கீற்றொன்று
கண்ணினைப் பறிப்பதுபோல்
என்னவளின் விழிப்பார்வை
என்னையும் பறித்ததன்று...

என்ன செய்வதென்று
ஒன்றுமே புரியவில்லை...
மீண்டும் புன்னகையில்
என்னவளும் என்னவென்றாள்...

“எங்கே எனது கவிதையென”
எங்கிருந்தோ ஓர் குரல்
என்னைவந்து உசுப்பிவிட
கவிதையைத் தேடுகின்றேன்
கவிமாலை காணவில்லை....

வந்த வாய்ப்பொன்று
வழிதவறிப் போகலாமா?!
மனமே வரவில்லை
மறுபடியும் தேடுகின்றேன்
அங்குமிங்கும் ஓடுகின்றேன்
அப்படியே தாவுகின்றேன்...

ஐயோ... அம்மா....

கண்விழித்து பார்க்கின்றேன்
கவிதாவைக் காணவில்லை....

கவிதை கிடைத்து விட்டது

No comments: