02/10/2018

கள்ளும் காமமும்



************************************
நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்....
************************************
பருகினால் சொருகிடும் கள்ளா இவள்?
பார்வையால் உருக்கிடும் பாவை இவள்!

நிறத்திலே கருப்பான ரம்மா இவள்?
நிழலிலும் அழகான ரம்பா இவள்!

குளுமையில் பொங்குகின்ற பீரா இவள்?
குணத்திலே பொறுமையான வீரா இவள்!

தலையிலே ஏறுகின்ற விஷ்கியா இவள்?!
தலைவனை மதிக்கின்ற வித்யா இவள்!

கசப்பினை தருகின்ற பிராந்தியா இவள்?
கடிந்தாலும் கசக்காத கவிதா இவள்!

உள்ளத்தை மயக்குகின்ற போதையா இவள்?
உண்மையைப் போதித்த கோதையே இவள்!

செ. இராசா

(ரம்பா- தேவலோகத்தில் உள்ள அழகான பெண், வீரா- படைப்பு, வித்யா- அறிவு, கவிதா- கவிதை)

கள்ளும் காமமும்
*****************
அச்சத்தில் தொடங்கிடும் முதலாட்டம்
இச்சைக்கு இசைந்தால் தொடராட்டம்

நாணத்தை மீறிடும் களியாட்டம்
“நான்”(னை) மறந்தால் கலியாட்டம்

கனத்தை மறைத்திடும் சதிராட்டம்
மனத்தை மயக்கிடும் புதிராட்டம்

ஆசையை அடக்கிடும் போராட்டம்
ஆசையை மீறினால் வெறியாட்டம்

உண்மையை உளறிடும் நாவாட்டம்
உலகத்தை மறக்கிற வெள்ளோட்டம்

✍️செ. இராசா

No comments: