31/10/2018

வாலி நீ வாழி



கவியரசர் வரிகளால் கவரப்பட்டு
கவியரசர் எதிரிலே கடைவிரித்து
கவியரசர் ரசித்த கவிஞனே

நீ...

வானத்தில் மையெடுத்த வித்தனே!
வார்த்தை விளையாட்டில் சித்தனே!
வாழ்க்கைக்கு வழிகாட்டும் புத்தனே!

திருவரங்கம் பெற்றெடுத்த
கவியரங்க ராஜனே; நீ
கவி ரங்கராஜனே....

ஆக நினைத்தாய்; அன்று ஓர் மாலி!
ஆகி நின்றாய்; அன்றே ஓர் வாலி!
ஆதி அடைந்தாய்; என்றும் புகழ் வாழி!

வாலி நீ வாழி!!!

No comments: