01/10/2018

உறக்கம் கலைவதெப்போ?!!


இறக்கமே இல்லாமல்
.......உயருகின்ற விலைவாசி
இரக்கமே இல்லாமல்
.......நடக்கின்ற அரசாட்சி
இரண்டிலும் சிக்கியுள்ள
.......அப்பாவிப் பொதுமக்கள்
இவைகளை மீட்டெடுக்க
......உறக்கத்தைக் கலைவதெப்போ?!

அறநெறி தெரியாமல்
......ஆள்கின்ற தலைவர்கள்
மறநெறி தெரியாமல்
.......எதிர்க்கின்ற தலைவர்கள்
இரண்டையும் சகிக்கின்ற
.......அப்பாவிப் பொதுமக்கள்
இவர்களைச் சுளுக்கெடுக்க
........உறக்கத்தைக் கலைவதெப்போ?!

உண்மையே இல்லாமல்
.........உரைக்கின்ற ஊடகங்கள்
நன்மையே செய்யாமல்
.........நடிக்கின்ற நடிகர்கள்
இரண்டையும் நம்புகின்ற
.........அப்பாவிப் பொதுமக்கள்
இவைகளை மதிக்காமல்
..........உறக்கத்தைக் கலைவதெப்போ?!!

நீதியின் ஓட்டையிலே
.........நீந்துகின்ற கயவர்கள்
நீதியை வழங்காமல்
.........நீட்டிக்கும் நடுவர்கள்
இரண்டையும் என்னவென்று
........கேட்காத பொதுமக்கள்
இவைகளைச் சரியாக்க
.......உறக்கதைக் கலைவதெப்போ?!

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments: