31/10/2018

உறவின் பலம் (குறளின் குரலாய்)


அகத்தில் அன்பினைக் கொண்டிருந்தால்
சகத்தில் அனைத்துமே உறவாகும்!
முகத்தில் சினத்தைக் கொண்டிருந்தால்
புறத்தில் அனைத்துமே வேறாகும்!

காகத்தின் குணத்தைக் கொண்டிருந்தால்
வேதனைத் துயரங்கள் வெகுதூரம்!
நாகத்தின் குணத்தைக் கொண்டிருந்தால்
வேதனைத் துயரங்கள் வெகுமானம்!

வாக்கினில் இன்சொல் கொண்டிருந்தால்
போற்றிடும் சுற்றமே சூழ்ந்திருக்கும்!
நாக்கினில் வன்சொல் கொண்டிருந்தால்
தூற்றிடும் சூழலில் வாழ்விருக்கும்!

No comments: