07/10/2018

புரியாத புதிருக்கு



புரியாத புதிருக்கு விடைதேடி ஒருவன்
சரியான பதிலுக்கு குருநாடி போனான்
அரிதான விடயங்கள் அறியாத அவனும்
தெரியாத ஞானத்தை எளிதாகக் கற்றான்

தெரியாத பலரோடு உறவாடும் பொழுதும்
தெளிவான மனதோடு சரியாக நின்றான்
சதியாலே சிலரோடு உறவாடும் பொழுதே
விதியாலே சிலநேரம் தடுமாறி நின்றான்

✍️செ. இராசா

No comments: