12/10/2018

நீ இல்லா உலகத்திலே--126 -வது கவிதைப்போட்டி-(வெற்றிக்கவிதை)


பொய் இல்லா உலகத்திலே
மெய்யென்ற வார்த்தையில்லை!
நோய் இல்லா உலகத்திலே
மருந்தென்ற சொல்லே இல்லை!

அறம் சாரார் உலகத்திலே
அறிவுரைகள் நிற்பதில்லை!
மறம் சாரார் உலகத்திலே
மறையுரைகள் நிலைப்பதில்லை!

தமிழ் கல்லார் உலகத்திலே
தமிழ்பேச்சு அர்த்தமில்லை!
தமிழ் கற்றோர் உலகத்திலே
தமிழ்தவிற ஏதுமில்லை!

நீரில்லா உலகத்திலே
ஓருயிரும் பிறப்பதில்லை!
நீ இல்லா உலகத்திலே
நான் வாழத் தேவையில்லை!

தமிழ்ப்பட்டறை நடத்திய 126 -வது கவிதைப்போட்டியில் முதலிடம் தந்த கவிஞர் வாலிதாசன் ஐயா அவர்களுக்கும், வாய்ப்பளித்த தலைவர் சேக்கிழார் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வணக்கங்களும்.
(தமிழ்ப்பட்டறை என்பது 10 உள்நாட்டுக்கிளைகள் மற்றும் 2 பன்னாட்டுக் கிளைகளும் கொண்ட அமைப்பு.

இதுவரையிலும் இந்த அமைப்பு நடத்தும் போட்டி தவிர வேறு எங்கும் நான் கலந்துகொண்டதில்லை. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு இந்த இரண்டு முதலிடங்கள் கிடைத்துள்ளது. இவைகளை இறந்த என் மாமன் மகளுக்கு அர்ப்பணிக்கிறேன்.
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2179662845685953/

No comments: