07/10/2018

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி

“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி.......” என்று வள்ளுவர் சொன்ன அளவுக்கெல்லாம் இந்த விடயம் அவ்வளவு பெருசு இல்லீங்க....ரொம்ப சின்ன விடயம்தான். இருந்தாலும் சின்னச்சின்ன விடயம்தானே நமக்கு தெரிவதில்லை. அதற்கு நாம ஒரு தீர்வும் தேடுவதில்லை. ஏன்னா அது சின்ன விடயம்தானே?!!!

இப்பெல்லாம் சின்ன விடயங்களுக்குத் தீர்வு காணொளியில் கொட்டிக் கிடக்குங்க.... உதாரணம்... காலுரை எப்படி மடிப்பது, வீட்டு உபயோகப் பொருட்கள் எப்படி செய்வது போன்ற விடயங்கள்.



அப்படி ஒரு விடயம் என் பையன் எனக்கு சொல்லித்தந்தான். பொதுவாக, புத்தகம் படிக்கும்போது, அதுவரை படித்தபகுதியை பின்பு தொடர்வதற்காக ஒன்று மடித்து வைப்போம், இல்லையினா ஏதோ ஒரு அட்டையை சொருகி வைப்போம், இல்லையா?!. இப்படி பண்ணுவதை பார்த்த என் பையன், எனக்கு ஒரு குச்சியில் பேப்பர் வைத்து படத்தில் உள்ளதுபோல் செய்து தந்தான். இப்பொழுது நல்ல உபயோகமாக இருக்குங்க.

உங்களுக்கும் உபயோகமாக இருக்குமேன்னு இந்த பதிவு போடுறேங்க.

வாழ்க வளமுடன்!

No comments: