02/10/2018

ஓர் பார்வை பார்


தேமதுரத் தமிழோசை
தேடிவரச் செய்திடுவேன்
ஓவியமே நீயென்னை
ஓர் பார்வை பாராயோ...

வானுயர்ந்த வள்ளுவனை
வாசலுக்கே வரவழைப்பேன்
ஒப்பற்ற என் குறளே(ரலே)
ஓர் பார்வை பாராயோ...

பார்புகழும் பாரதியை
பாட்டிசைக்க பணித்திடுவேன்
ஓடிவரும் கவியமுதே
ஓர் பார்வை பாராயோ...

கவியரசர் கவியேற்ற
கட்டளைகள் போட்டிடுவேன்
தாவிவரும் தெள்ளமுதே
ஓர் பார்வை பாராயோ...

கவிக்கோவின் வரிகளிலே
ஹைக்கூவில் காதலிப்பேன்
கருவிழியாய் இருப்பவளே
ஓர் பார்வை பாராயோ...

என்னுடைய தமிழ்கொண்டே
உன்னைநான் தொட்டிடுவேன்
கவிமலராய் சிரிப்பவளே
ஓர் பார்வை பாராயோ...

No comments: