22/10/2018

காதல் இன்பமானது


நீரிலே வாழ்கின்ற
............... மீன்களைப்போல்- உன்
நினைவிலே உயிர்ப்புடன்
................வாழுகின்றேன்!

மழையிலே துளிர்க்கின்ற
...............உயிர்களைப்போல்-உன்
வரவிலே வேகமாய்த்
...............துளிர்க்கின்றேன்!

மொழியிலே மகிழ்கின்ற
................தமிழனைப்போல்- உன்
விழியிலே விழுந்ததில்
................மகிழுகின்றேன்!

கவியிலே கரைகின்ற
.................கவிஞனைப்போல்- என்
கவி(தை)யே நீயெனக்
.................கரைகின்றேன்!

தன்னையே தேடிய
.................புத்தனைப்போல்-நான்
என்னையே உன்னிடம்
.................தேடுகின்றேன்!

பாலிலே உறைகின்ற
.................நெய்யினைப்போல்- உன்
பார்வையில் காதலை
..................உணருகிறேன்!

பக்தியில் உருகிடும்
.................ஆத்திகன்போல்- உன்
பக்கத்தில் நானிங்கே
.................உருகுகின்றேன் !

கண்டதை உளறிடும்
.................நாத்திகன்போல்- உனைக்
கண்டதில் நானும்தான்
.................உளறுகின்
றேன்
 
செ. இராசா

No comments: