07/10/2018

நீயெந்தன் வரமே


என்னுள் எப்படி நீ வந்தாய்?!
என்னுயிரே சொல்
என்னுள் எப்படி நீ வந்தாய்?!

அரும்பிய மீசையோடு
அலைந்தேனே... திரிந்தேனே
அப்போதே என்னுள்ளே
ஆசையோடு வந்தாயோ?!!

முளைவிடும் தாடியினை
முகச்சவரம் செய்துவிட்டு
கண்களிலே வலைபோட்டு
கண்டதைத் தேடியதில்
இன்பத்துப் பாலாக
இதயத்தில் நுழைந்தாயோ?!!

கல்லூரி வாசல்தாண்டி
பலநூறு மைல்கள் தாண்டி
எங்கெங்கோ போனாலும்
எப்போதும் உறவாட
முகநூலில் வந்தாயோ?!!

அந்நாளும் இந்நாளும்
எந்நாளும் சொல்லிடுவேன்
அன்பான நற்றமிழே
நீயெந்தன் நல்வரமே....

No comments: