25/10/2018

அஃது எங்கே சொல்வீரோ?!



அன்பே...அழகே...என்றாலோ
ஆகா.... அடடா...என்கின்றாள்

இனியவளே...என் இதயமே என்றாலோ
ஈ...ஈ...என சிரிக்கின்றாள்

உயிரே.... என் ஓவியமே...என்றாலோ
ஊடலைத் தவிர்க்கின்றாள்

எங்கேனும் சென்றால்தான்
ஏதேதோ கேட்கின்றாள்...

ஐயத்தின் பார்வையிலே;
ஒன்றுமில்லா சங்கதிக்கு
ஓ... வென்று அழுகின்றாள்

ஔடதம் தேடுகின்றேன்
அஃது எங்கே சொல்வீரோ?!

No comments: