16/12/2019

#இன_நல_மாண்பு

உயிருள்ள எல்லா இனங்களையும்
உயிரினம் என்றே சொன்னாலும்
மகத்துவ இனமே நாம்தானே
மனிதா இன்னும் பிரிவினையேன்?!!

உலகில் எல்லா மொழிகளையும்
உயர்வாய் அவரவர் சொன்னாலும்
தனித்துவ இனமே நாம்தானே
தமிழா இன்னும் பிரிவினையேன்?!!

படைக்கிற எல்லாப் படைப்பிற்கும்
படிப்பவர் ஆயிரம் சொன்னாலும்
கவிக்கிற இனமும் நாம்தானே
கவிஞா உன்னுள் பிரிவினையேன்?!

✍️செ. இராசா

#இன_நல_மாண்பு
#வள்ளுவர்_திங்கள்_97

No comments: