14/12/2019

எப்போதும்போல்தான்அங்கே இப்போதும் சென்றேன்



எப்போதும்போல்தான்அங்கே
இப்போதும் சென்றேன்!!
ஆனால்,
இப்போது மட்டும்...
ஏனென்று தெரியவில்லை..

இரு கண்கள்...
என்னையே நோக்கியது...
நோக்கியதோடு அல்லாமல்
நெருங்கி வந்தது..
வந்ததோடு அல்லாமல்
வேகமாய்ப் பேசியது..

“பாய்சாப் இசா நகி ஆனேகா” என்றது
கியா...கியூ என்றேன்...!!!

அந்தப் பூங்காவில்
அரை டவுசர்
அனுமதி இல்லையாமாம்

இது
முக்கால் டவுசரென
முறையிட்டாலும்
இதில்
முட்டி தெரிகிறது என
முனங்கினான்....

டிகே டிகே என நகர்ந்தேன்
டிக்டாக் கொடுமைகளை நினைத்தவாறே

✍️செ.இராசா

(படத்தில் நண்பரின் மகளோடு நான்)

No comments: