09/12/2019

#காமம்_2




காமம் என்று சொன்னதுமே
காதைப்
பொத்திடும்
உறவுகளே!
காமன் நெஞ்சில் வந்ததுமே
கண்ணில்
கணையேன்
விடுகின்றீர்?

தந்தை செய்த வேள்வியிலே
தாயில்
தோன்றிய
உறவுகளே!
விந்தை செய்யும் காமத்திலே
வேண்டா
வெறுப்பேன்
கொள்கின்றீர்?



காம சூத்திரத் தத்துவத்தைக்
கற்றிடும்
முறைமையில்
கற்றிடவே
காமச் சித்திரச் சிற்பங்களைக்
கோவில்
குளங்களில்
வடிவமைத்தார்!

காமம் என்கிற பாற்கடலைக்
கட்டிய
துணையுடன்
கடந்திடவே
வாமன வடிவிலே வள்ளுவரும்
வையகம்
தளைத்திட
வழிசெய்தார்!



அடக்க நினைத்தால் அடங்காமல்
அறிய
நினைத்தால்
அடங்குகின்ற
கடவுள் படைத்த காமத்தின்
கடலைக்
கடக்க
முயல்பவரால்:

இன்பம் துன்பம் இரண்டையுமே
எளிதாய்க்
கடக்க
முடிவதினால்
இன்பக் கடலாம் காமத்தை
இனிதே
கடந்து
வென்றிடுவீர்!

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

✍️செ. இராசா

#காமம்_2
#காமமென்னும்_கடல்
#வள்ளுவர்_திங்கள்_96

No comments: