02/12/2019

#கயவர்கள்_சாக்கிரதை



உடுப்பதும் உண்பதும் கண்டாலே
சிடுசிடு என்றே சினந்திடுவான்!
குடுகுடு என்றே ஓடிவந்து
குறைகள் ஆயிரம் சொல்லிடுவான்!

தனக்குத் தானே பட்டமிட்டு
தன்னைத் தானே வியந்திடுவான்!
பிணக்குக் கவலை ஏதுமின்றி
தனக்குத் தானே மகிழ்ந்திடுவான்!

துடிப்போர் கண்டு கொடுக்காமல்
அடிப்போர் அடிக்கக் கொடுத்திடுவான்!
முன்னால் பல்லைக் காட்டிவிட்டு
பின்னால் கல்லை எறிந்திடுவான்!

#கயவர்கள்_சாக்கிரதை

No comments: