04/12/2019

#என்ன_விலை_அழகே?!!

#என்ன_விலை_அழகே?!!
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்!
விலை எதுவென்றாலும் தருவேன்!
இன்று விலையைக் கண்டு வியந்துபோகிறேன் ஓ
ஓரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்!

படைத்தான் இறைவன் உனையே
நினைத்தான் உடனே அவனே
அழுகை கொடுக்கும் திறமை முழுக்க
உன்னுடல் சார்ந்தது உன்னகம் சேர்ந்தது
உரிக்க உரிக்க எதுவும் புரியா
பொன் மேனி உன் மேனி
நீதானே மெய்ஞானி

விரைவினில் விலை குறைந்திடு
விரல்பட மெல்லப் புகுந்திடு
கடன் பட்டு வாங்கத் துடிக்குது
உடன் வந்து நீயும் தடுத்திடு

சித்திரப் புன்னகை ஏன்டி?
நித்திரை போனது வாடி
பற்றிடப் பாயுது நெஞ்சம் உனையே!
உன்னுடல் உண்டிட வேண்டி
என்னுடல் ஏங்குது வாடி
தொட்டிட ஏங்குது நெஞ்சம் உனையே!

✍️செ. இராசா



படம் உதவி Swarnam Meenakshinathan அம்மா (நன்றி அம்மா)

No comments: