22/12/2019

எத்தனை திரவியம் போட்டாலும்

எத்தனை திரவியம் போட்டாலும்
செத்ததன் நாற்றம் போய்விடுமா?!
எத்தனை தடவைக் குளித்தாலும்
அத்தனை அழுக்கும் போய்விடுமா?!
எத்தனை மொட்டை அடித்தாலும்
அத்தனை பாவமும் கொட்டிடுமா?!

அருவியாய் நீரைப் பெய்தாலும்
எரிமலை என்னத் தூர்ந்திடுமா?!
கவித்திட கம்பன் வந்தாலும்
செவிடன் காதில் கேட்டிடுமா?!
அடிக்கடி ஆலயம் சென்றாலும்
அடிமன மிருகம் மாய்ந்திடுமா?!

#உள்ளே_ஓர்_மிருகம்

No comments: