31/12/2019

பொறுமை



பொறுக்கும் தன்மையே
பொறுமை என்று
பொறுமையின் சிறப்பைப்
பொறுமையாய்ச் சொல்லிவிட்டு;

பொறுக்கும் மெய் மறந்தோர்க்கு
“பொறு” என்று அடித்துச் சொல்லி
பொறுமையின் பெருமையைப்
பொறுப்பாய்க் காட்டிவிட்டு;

பொறாமையில் தூற்றுவோரைப்
பொறாமல் சண்டையிட்டால்
பொறுமை..பொறுமை என்று...
பொறுமையும் நகைக்குமன்றோ?!

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_99

No comments: