19/12/2019

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மித்திரன்


மண்வாசம் மாறாது
.................வாழ்கின்றத் தம்பியின்
கண்ணிலே நிற்கின்றக்
..................கார்முகில்- கண்ணனை
மண்ணிலேத் தோன்றிய
.................மைந்தனாம் மித்திரனை
வெண்பாவில் வாழ்த்திடும் வாழ்த்து!

புத்திரனாய்த் தம்பிக்குப்
..................பூமியிலே வந்தவனே
சத்தியமாய் நின்தந்தை
...................சாமியடா- மித்திரா
இத்தனைநாள் ஆனபோதும்
.................. இன்றைக்கும் மாறாத
வித்தையினைக் கற்றிடுவாய் நீ!

என்நண்பன் நாகராஜால்
....................என்னுள்ளம் ஏறியவன்
அன்போடு சொல்கின்ற
...................அண்ணனென்ற- இன்சொல்லில்
உள்ளத்தில் ஊற்றெடுத்து
ஓடுகின்ற பாசமும்
கள்ளமில்லை மித்திரா காண்!

(இன்றைக்கு நான்சொல்லும்
...............இவ்வார்த்தை அர்த்தத்தைப்
பின்நாளில் கண்டு பிடி!)

No comments: