28/12/2019

தேர்தல் முடிந்த நேரத்தில் ஒரு பாடல்


எங்க ஊரு நல்ல ஊரு
எந்த பேதமும் வந்ததில்லை
என்ன ஆச்சு? ஏது ஆச்சு?
அந்தக் காலம் இப்போ இல்லை

(எங்க ஊரு.....)

உள்ளூர் தேர்தல் வந்தாப் போதும்
எல்லாப் பேதமும் இங்கேப் புகுறும்
ஓட்டுக் கணக்கு தூக்கத்தைக் கெடுக்கும்!
நோட்டுக் கணக்கு துயரத்தைக் கொடுக்கும்!

(எங்க ஊரு.....)

எந்தத் தேர்தல்? இந்தத் தேர்தல்?
எதுக்கு இப்போ? இன்னொரு தேர்தல்?
எதுவும் தெரியா எங்கூர் பாட்டி...
என்றும் கேப்பாள் பொக்கையக் காட்டி!

(எங்க ஊரு.....)

ஒட்டும் உறவும் ஊருல இல்லை
ஒட்டுப் போடவும் ஆளே இல்லை
விரும்பி யாரும் விலகிட வில்லை
இருந்து பொழைக்க வழியே இல்லை!

(எங்க ஊரு.....)

நகரம் தேடியே நகரும் வாழ்க்கை
நாங்க ஒன்னும் விரும்பவே இல்லை
ஒன்னும் இல்லா ஊருக்குள்ளை
இன்னும் இன்னும் என்னத்த சொல்ல?!

(எங்க ஊரு.....)

யாரு பெருசு? யாரு சிறுசு?
எதுக்கு இப்போ சண்டை சண்டை
என்ன ஆச்சு? ஏது ஆச்சு?
இன்னும் எதுக்கு...........ஐயோ ஐயோ

போங்கப்பா....போங்க...
போய் வேலையப் பாருங்க...

செ. இராசா

No comments: