20/12/2019

அகதி


அ- அவசர நிலையில்
க- கதியற்றுப்போய்த்
தி- திண்டாடுவோர்
என்பதை உணர்த்தவா
அகதி என்றழைத்தார்கள்

ஐயகோ...

அகதி எனும்போதே
அகத் தீ எரிகிறதே

அகதி எனும்போதே
புறத்திலும் வெடிக்கிறதே...

சொந்த இடம் விட்டு
வந்த இடம் நொந்து
எந்த இடமின்றி
என்ன வாழ்வென்று
ஏங்கும் நிலை இன்று

போதும் போதும் ஐயா
போதும் போதும்...

சொர்க்கம் நரகமென
செத்தால் கிடைக்குமாமே ?!!

உண்மையைச் சொல்லுங்கள்...

அங்கேயாவது
அகதி முகாம் இல்லைதானே?!!

✍️செ. இராசா

(அண்ணாவின் கவிதையில் வியந்துபோய் எழுதிய பின்னூட்டம் இது... அந்தப் பிரம்மாண்டக் கவிதையைப் பாருங்கள். அகதியின் வலிகளை உணர்வீர்கள்)

No comments: