21/12/2019

காதல்-2


எங்கே...
உங்களுக்கு உண்மையில்
அந்தக் காதல் என்ற ஒன்று இருந்தால்
அது பற்றி எழுதுங்கள் பார்ப்போம்?!!

என் வாயை அடைக்க
என்னவள் விடும் சவால் அது!

உண்மைதான்...

கண்ணே மானே என்றால்
கண்ணும் மானும் கதறி அழும்
நிலவே மலரே என்றால் இனி
நிலவும் மலரும் ஓடி விடும்

நீ இல்லையெனில்
நான் சாவேன் என்றால்
அந்த சாவே
நம்மை சமாதிகட்ட
ஆயுதம் வழங்கும்

சரி கழுதை என்று
இதயக் ❤️குறியீடனப்பினால்
இளிக்கும் 😂குறியீடு
எகத்தாளமாய் வரும்!

அதையே ❤️❤️மீண்டும் அனுப்பினால்
அடுத்த நொடியே
குடிச்சது போதுமென்று
குறியீடு வரும்...

அடக்கொடுமையே...
ஐ லவ் யூ..என்றால்
இன்னுமா என்று....
இன்னும் சந்தேகம் வரும்..

என்ன கொடுமையென்று
ச்சும்மா.......இருந்தால்!
அலைபேசி வழியாக
அழைப்பு வரும்...
ஆம்..
காதல் வரும்❤️❤️❤️😊😊😊

✍️செ. இராசா

No comments: