21/12/2019

சிரிக்கும் இறைவன்


அனைத்தையும் துறந்துவிட்டு
அணைக்கின்ற துறவிகண்டும்;

அறமுள்ளத் தலைவனைப்போல்
அரசியல் செய்வார்கண்டும்;

வஞ்சக வணக்கம் வைத்துக்
கெஞ்சிடும் மாந்தர்கண்டும்;

மறைபொருள் தேடிவிட்டு
மறைவிலே மாறுவோர் கண்டும்;

இப்படி எழுதிவிட்டி
அப்படியே நகர்வோர் கண்டும்;

விரும்பிப் படித்துவிட்டு
விருப்பீடு தராதோர் கண்டும்;

அடடா அடடா என்று
ஆண்டவன் சிரிக்கின்றான்!

✍️செ. இராசா

No comments: