10/12/2019

பாடல் மெட்டு: முத்தைத்திரு பத்தித்...


சந்தக்கவி தந்தக் கவியென
விந்தைக்கவி தந்தக் கவியென
என்னக்கவி இந்தக் கவியென
...................................நினையாமல்

சிந்தைக்கவி சிந்தும் கவியென
சின்னக்கவி தத்துக் கவியென
இந்தக்கவி உந்தன் கவியென
.................................நினைவாயோ
அன்புக்கவி கொஞ்சும் கவியென
இன்பக்கவி கொட்டும் கவியென
எண்ணக்கவி வண்ணக் கவியென
.....................................தமிழோடு
உள்ளக்கவி சொல்லும் கவியென
நல்லக்கவி உண்மைக் கவியென
வெல்லக்கவி வெள்ளக் கவியென
...................................வருவாயோ
அருள்வோயோ முருகா அருள்வாயோ!!!
✍️செ. இராசா

No comments: