03/12/2019

அசாம் மேகாலயா நினைவலைகள்-2

அசாம் மேகாலயா நினைவலைகள்-2
************************************
தீவிரவாதப் பகுதியிலே; அன்று
தீயைப்போலே வேலை செய்தேன்!
நேர்மையின் வழியில் சென்றதினால்
நேர்ந்தது எனக்குக் கொஞ்சமில்லை!


ஆட்களைக் கடத்தும் கூட்டமொன்றை
ஆர்மிப் படையினர் சுட்டனராம்!
இறந்து கிடந்தோர் சட்டையிலே
இருந்தது ஒற்றைக் காகிதமாம்!

காகிதம் சொன்ன சேதிபற்றிக்
காவல் துறையினர் சொல்லியதை
இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன்!
என்றும் நினைத்து வியக்கின்றேன்!

அவர்கள் கடத்தும் நபர்களிலே
அடியேன் பெயரே முதல்பெயராம்!
அடிக்கடி அவர்கள் முயன்றாலும்
அடியேன் ஏனோ சிக்கலையாம்!

........தொடரும்
✍️செ. இராசா
(பழைய படங்களை அனுப்பி வைத்து என் ஞாபகங்களை மீண்டும் துளிர்விடச்செய்த Afzalur Rahman ற்கு நன்றி....Both Sukria bhaijan)





No comments: