08/12/2019

ஆனந்த யாழை .....மீட்டுகிறாய்




ஆனந்த யாழை
.....மீட்டுகிறாய்- அந்த
ஆதியின் ரூபத்தைக்
.....காட்டுகிறாய்!
கண்ணில் தென்றலாய்த்
........தாவுகிறாய்
நெஞ்சில் மீன்களாய் நீந்துகிறாய்!


ஒரு தங்கை இல்லா சோகம் என்னில்
....தொலைந்து போனது போனதடி!
அரும் புதையல் எல்லாம்
என்னைத்தேடி வந்தது உன்னால் வந்ததடி!

உந்தன் தெய்வச் சிரிப்பைக்
......கண்டுகொண்டேன்
பேசத் தோன்றவில்லை
.......வார்த்தை இல்லையடி!

உந்தன் அன்னை அன்பைக்
.....கண்டுகொண்டேன்
ஒன்றும் தோன்றவில்லை
....தெய்வம் உண்மையடி!

✍️செ. இராசா

No comments: