31/12/2019

உன்னோடு வாழ்ந்த ஒவ்வொரு மணித்துளியும்



உன்னோடு வாழ்ந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணித்த பின்னாலும்
மறையாது அற்புதமே...

காதலிலே சில நிமிடம்..
மோதலிலே சில நிமிடம்..
பாடலிலே சில பொழுது..
ஊடலிலே சில பொழுது..

எப்படி இருந்தாலும்
எப்போது நினைத்தாலும்
என்னோடு வருவாயே..
என்னோடு கலப்பாயே..

உன்னால் அடைந்த சுகம்
ஒன்றல்ல இரண்டல்ல
ஒவ்வொன்றாய் சொல்வதற்கு
ஒரே வார்த்தையில் சொல்வதெனில்
நீ இன்றி நானில்லை..
என் அன்புத் தமிழே
என் அன்பு நினைவுகளே...
உங்களால் வளர்கிறேன்..

2019 வரை வளர்த்த உங்களுக்கு
2020 ஆம் வருடத்திற்கான
உலகப் புதுவருட வாழ்த்துகளும்
உளமார்ந்த நன்றியும்!!

நன்றி! நன்றி!! நன்றி!!!

✍️செ. இராசா

No comments: