16/11/2019

சிலைகள் பேசினால்


சிறை சென்று செக்கிழுத்த எம்மை
சிறுபிள்ளைபோல் ஏன் இன்று சிதைக்கின்றீர்?

நீதி வேண்டி சட்டம் தந்த எம்மை
நீதியின்றி ஏன் பறை சாற்றுகின்றீர்?

நாடெல்லாம் பள்ளி தந்த எம்மை
நாடார்போல் ஏன் சிலர் பார்க்கின்றீர்?

தேன்தமிழ்த் தோழனான எம்மை
தேவரென ஏன் சொல்லிப் பிரிக்கின்றீர்?

நாத்திகர்க்கும் பொதுவான எம்மை
ஆத்திகனாய் ஏன் பட்டை அடிக்கின்றீர்?

சிலைவணக்கம் பிடிக்காத எம்மை
சிலைவைத்து ஏன் மொட்டை அடிக்கின்றீர்?

#சிலைகள்_இன்னும்_பேசும்....!!!!

No comments: