02/11/2019

#முகநூல்_நீதி_பாடல்

எழுதாமல் ஒரு நாளும்
.................இருக்க வேண்டாம்!
எழுதியதாய்ப் பெருமைகொண்டுத்
....................திரிய வேண்டாம்!
மதியாதோர் பதிவுக்குப்
.....................போக வேண்டாம்!
மதிப்போரை மனம்நோகச்
....................செய்ய வேண்டாம்!

சான்றிதழைப் பெரிதென்றே
....................எண்ண வேண்டாம்!
சான்றோரைத் தவறென்றே
...................சொல்ல வேண்டாம்!
அறம்பாடும் பெரியோரைப்
..................பகைக்க வேண்டாம்!
அகம்பாடும் அன்பர்களை
..................விலக்க வேண்டாம்!

தென்னாட்டை ஆளுகின்ற
.......................சிவனே! சிவனே!
தெளிவான வரம்தந்து
..................அருள்வாய் சிவனே!

✍️செ. இராசா

பாடலாகக் கேட்க;


https://www.facebook.com/1529793087155445/posts/1695650860569666?vh=e&d=n&sfns=mo

https://www.facebook.com/1529793087155445/posts/1695650860569666?vh=e&d=n&sfns=mo

No comments: