09/11/2019

கீழடி பாடல்... #நாசா_பார்க்குண்டா


#நாசா_பார்க்குண்டா_நம்மாளு_ஆண்டா
மாசே நாம்தான்னு ஊர்பேசுண்டா
பீட்டா பேட்டான்னு யாராச்சும் வந்தால்
டாட்டா காட்டிட்டே ஊர்போகுண்டா
வாடா....வாடா
ஆதாரம் எங்கேன்னா நீகேட்ட- கீழடி
போதாதா உன்மூக்க நான்பேர்க்க

ஊர்போற்றவே பார்போற்றவே
கோலோச்சியே வாழ்ந்த இனமடா!
ஏர்பூட்டியே தேரோட்டியே
பாராட்டிலே வாழ்ந்த இனமடா!
யார்பார்த்ததால் கண்பட்டதோ
ஊர்கெட்டதே நீயும் யோசிடா!
யார்யாரையோ மேலேற்றவா
நாம்வாழ்கிறோம் நீயும் யோசிடா!

தோண்டத் தோண்ட மண்ணுக்குள்
தமிழன் ஊரு டா
தோண்டத் தோண்ட எங்க பேரு டா

அன்றைக்குப் பிரிவினை
இங்கு இல்லையேடா..
இன்றைக்கு இத்தனை
பிரிவு வந்ததேன்டா?!
எம்பாட்டன் வள்ளுவன்
எங்கசாமி தான்டா!
என்றைக்கும் பைந்தமிழ்
எங்கவேதம் போடா!

கெத்தா வாழ வேணும் வாடா!
மத்தப் பேச்சே வேணாம் போடா!

தமிழனென்கிற ஒற்றைவார்த்தைதான்
நம்ம சேர்க்குண்டா
ஒன்னாசேருடா... ஒன்னாசேருடா
கோட்டைகட்டி கொடியுமேத்தி
வாழ்ந்தவீரன் நாமதானடா!

தோண்டத் தோண்ட
மண்ணுக்குள் தமிழன் ஊரு டா!
தோண்டத் தோண்ட எங்க பேரு டா!

எல்லைகள் என்பதே
அன்று இல்லையேடா!
இன்றைக்கு எல்லையால்
எங்கும் தொல்லையேடா!
ஊரெல்லாம் உறவுன்னு
சொன்னநாம தாண்டா!
தாய்மண்ணைத் தோண்டியே நம்மைத்தேடுறோண்டா!

சொத்தக் காண வேணும் வாடா!
செத்த ஆழம் இன்னும் போடா!

தமிழனென்கிற ஒற்றையுணர்வுதான்
நம்ம சேர்க்குண்டா!
ஒன்னாசேருடா ஒன்னாசேருடா!
நாடுதாண்டி ஆழிதாண்டி
வாழ்ந்தவீரன் நாமதானடா!

✍️செ. இராசா

No comments: